Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பத்ம கணபதி கோவிலில் கும்பாபிஷேக விழா

பத்ம கணபதி கோவிலில் கும்பாபிஷேக விழா

பத்ம கணபதி கோவிலில் கும்பாபிஷேக விழா

பத்ம கணபதி கோவிலில் கும்பாபிஷேக விழா

ADDED : செப் 06, 2025 01:43 AM


Google News
மோகனுார் :மோகனுார் தாலுகா, எஸ்.வாழவந்தி சந்தைப்பேட்டை அருகில், பத்ம கணபதி கோவில் உள்ளது. இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா சிறப்பாக நடந்தது. விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.

தொடர்ந்து, சிறப்பு அபிஷேகம், சுவாமி தரிசனம் நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, விழாக்குழுவினர், கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us