Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கடித போட்டியில் பங்கேற்க அழைப்பு

கடித போட்டியில் பங்கேற்க அழைப்பு

கடித போட்டியில் பங்கேற்க அழைப்பு

கடித போட்டியில் பங்கேற்க அழைப்பு

ADDED : அக் 05, 2025 12:52 AM


Google News
ஈரோடு, ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கோபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவிலான கடித போட்டி, 'லெட்டர் டூ மை ரோல் மாடல்' தலைப்பில், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என ஏதேனும் ஒரு மொழியில், 'முதன்மை அஞ்சல் துறை தலைவர், தமிழ்நாடு வட்டம், சென்னை-2' என்ற முகவரிக்கு எழுதி அனுப்ப வேண்டும். உறையின் மீது, 'Dal Akhar-அஞ்சல் துறை கடித போட்டி-2025-26' என குறிப்பிட வேண்டும்.

டிச.,8க்குள் அனுப்ப வேண்டும். 18 வயது வரை, உள் நாட்டு அஞ்சல் அட்டை பிரிவு, அஞ்சல் உரை பிரிவிலும், 18 வயதுக்கு மேற்பட்டோர், உள்நாட்டு அஞ்சல் அட்டை பிரிவு, அஞ்சல் உறை பிரிவு எனவும், 4 பிரிவாக போட்டியில் பங்கேற்கலாம். அஞ்சல் உறை பிரிவில், ஏ-4 அளவு வெள்ளை தாளில், 1,000 வார்த்தைக்கு மிகாமலும், உள்நாட்டு அஞ்சல் அட்டை பிரிவில், 500 வார்த்தைக்கு மிகாமல் எழுத வேண்டும்.

கையால் எழுதப்பட்ட கடிதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.ஒவ்வொரு பிரிவிலும் மாநில அளவில் முதல், 3 பரிசாக, 25,000, 10,000, 5,000 ரூபாய்; தேசிய அளவு பரிசாக, 50,000, 25,000, 10,000 ரூபாய் வழங்கப்படும். மாநில அளவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று கடிதங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்படும். பின் தேசிய போட்டி பரிசு அறிவிக்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us