Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோட்டில் குட்கா விற்ற மளிகை கடைக்கு ரூ.1 லட்சம் அபராதம்

ஈரோட்டில் குட்கா விற்ற மளிகை கடைக்கு ரூ.1 லட்சம் அபராதம்

ஈரோட்டில் குட்கா விற்ற மளிகை கடைக்கு ரூ.1 லட்சம் அபராதம்

ஈரோட்டில் குட்கா விற்ற மளிகை கடைக்கு ரூ.1 லட்சம் அபராதம்

ADDED : ஜூன் 17, 2025 02:10 AM


Google News
ஈரோடு, ஈரோட்டில் குட்கா பொருட்களை விற்க வைத்திருந்த கடைக்காரருக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

ஈரோடு உணவு பாதுகாப்பு துறை, மாநகராட்சி அலுவலர் அடங்கிய குழுவினர், திண்டல், வில்லரசம்பட்டி பகுதியில் உள்ள, 27 மளிகை கடைகளில் நேற்று சோதனை நடத்தினர். இதில் திண்டல், மாருதி நகரில் ஆசீர் என்பவருக்கு சொந்தமான கடையில், 1.120 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்தனர். கடையை பூட்டி சீல் வைத்து, உரிமையாளர் ஆசீருக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us