Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோட்டில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

ஈரோட்டில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

ஈரோட்டில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

ஈரோட்டில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

ADDED : டிச 01, 2025 03:16 AM


Google News
ஈரோடு:ஈரோட்டில் மேட்டூர் ரோடு, திருச்சி கபே அருகில் உள்ள, ஈரோடு ஜெம் மற்றும் ஜுவல்லரி டெக்னாலஜி பயிற்சி மையத்தில், தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி அளிக்கப்படுகிறது. வரும், ௮ம் தேதி முதல் 17ம் தேதி வரை, 10 நாட்கள் பயிற்சி நடக்கும்.

தங்கத்தின் விலை கணக்கிடும் முறை, கொள்முதல் செய்யும் முறை, உரை கல்லில் தங்கத்தின் தரம் அறிதல், கடன் தொகை வழங்கும் முறை, ஹால் மார்க் தரம் அறியும் விதங்கள் குறித்து பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. 18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பில்லை. கல்வி தகுதி குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி. பயிற்சியின் இறுதியில் இந்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

பயிற்சி முடித்தவர்கள் தேசிய கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் நகை அடகு நிதி நிறுவனங்களிலும், நகை மதிப்பீட்டாளராகவும் பணியில் சேரலாம். பயிற்சியில் சேர விரும்புவர்கள் மூன்று பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, முகவரி சான்றிதழ், கல்வி சான்றிதழுடன் அணுகவும். பயிற்சி கட்டணம், 7,900 ரூபாய். கூடுதல் விபரம் பெற, 94437 28438 என்ற எண்ணை அணுகலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us