Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கஞ்சா பதுக்கிய வழக்கில் மேலும் நான்கு பேர் கைது

கஞ்சா பதுக்கிய வழக்கில் மேலும் நான்கு பேர் கைது

கஞ்சா பதுக்கிய வழக்கில் மேலும் நான்கு பேர் கைது

கஞ்சா பதுக்கிய வழக்கில் மேலும் நான்கு பேர் கைது

ADDED : ஜூலை 05, 2024 12:45 AM


Google News
ஈரோடு: ஈரோட்டை அடுத்த மேட்டுக்கடை, சாணார்பாளையத்தில் ஒரு வீட்டில், வெள்ளோடு போலீசார், 75 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 150 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக மூன்று பேரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வந்தனர். இந்நிலையில் ஈரோடு, சூரம்பட்டி, பாரதிநகர் முருகேசன், 31, சரவணன், 29. கருங்கல்பாளையத்தை சேர்ந்த கார்த்தி, 27, தினேஷ், 29, ஆகியோரை, ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். ---வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us