Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மகன் கொலை வழக்கில் ஜாமினில் வந்த தந்தை அதீத குடியால் மரணம்

மகன் கொலை வழக்கில் ஜாமினில் வந்த தந்தை அதீத குடியால் மரணம்

மகன் கொலை வழக்கில் ஜாமினில் வந்த தந்தை அதீத குடியால் மரணம்

மகன் கொலை வழக்கில் ஜாமினில் வந்த தந்தை அதீத குடியால் மரணம்

ADDED : ஜூன் 03, 2025 01:36 AM


Google News
பவானி, ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகேயுள்ள கோனேரிப்பட்டி, பம்ப் ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 62; ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். இவரது மனைவி இருசாயி, 55; தம்பதியரின் மகன் நந்தகோபால், 32; தந்தை, மகன் இருவருக்கும் குடிப்பழக்கம் உண்டு. போதையில் இருவரும் அடிக்கடி தகராறில் ஈடுபடுவது வழக்கம். கடந்த, ௨௦௨௪ அக்., ௩௦ம் தேதி வழக்கம்போல் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், கட்டையால் பாலகிருஷ்ணன் தாக்கியதில் நந்தகோபால் பலியானார். அம்மாபேட்டை போலீசார் விசாரணையில், குடிபோதையில் மனைவி இருசாயியிடம் தகராறு செய்த மகனை, கட்டையால் தாக்கியதில் இறந்தது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட பாலகிருஷ்ணன், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த மாதம், 15ம் தேதி ஜாமினில் வந்தார்.

சிறைக்கு சென்றும் திருந்தாமல் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால், அருகிலுள்ள மகள் வீட்டுக்கு இருசாயி சென்று விட்டார். தினமும் சாப்பாடு மட்டும் கொண்டு வந்து கொடுத்து விடுவார். நேற்று முன்தினம் மாலை வீட்டுக்கு வெளியே மரத்தினடியில் படுத்திருந்த பாலகிருஷ்ணன் நீண்ட நேரமாக எழவில்லை. அக்கம்பக்கத்தினர் தகவலின்படி சென்ற மனைவி, கனவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us