/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ எம்.எல்.ஏ., அலுவலகத்தில் 'அப்பா கணினி கூடம்' திறப்பு எம்.எல்.ஏ., அலுவலகத்தில் 'அப்பா கணினி கூடம்' திறப்பு
எம்.எல்.ஏ., அலுவலகத்தில் 'அப்பா கணினி கூடம்' திறப்பு
எம்.எல்.ஏ., அலுவலகத்தில் 'அப்பா கணினி கூடம்' திறப்பு
எம்.எல்.ஏ., அலுவலகத்தில் 'அப்பா கணினி கூடம்' திறப்பு
ADDED : ஜூன் 07, 2025 01:36 AM
ஈரோடு, ஈரோடு கிழக்கு தி.மு.க., எம்.எல்.ஏ., சந்திரகுமாரின் தனி அலுவலகம், அகில்மேடு வீதியில் உள்ளது. இங்கு 'அப்பா கணினி இலவச பயிற்சி கூடம்' அமைக்கப்பட்டு நேற்று திறக்கப்பட்டது. வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்.
பின் எம்.எல்.ஏ., சந்திரகுமார் கூறியதாவது: கடந்த முறை நான் எம்.எல்.ஏ.,வாக இருந்த போது, சூரம்பட்டியில் எனது அலுவலகத்தில், மாணவ, மாணவியர், பெண்களுக்கு இலவசமாக கணினி பயிற்சி வழங்கினேன். தற்போது எனது அலுவலகத்தில், 20 கணினி அமைத்து, 2 பயிற்சியாளர் மூலம் காலை, 8:00 முதல் இரவு, 8:00 மணி வரை இலவசமாக கணினி பயிற்சி வழங்குகிறோம். அடிப்படை பயிற்சியாக ஒரு மாதம் தினமும், 1 மணி நேரம் என ஒரு ஷிப்ட்டுக்கு தலா, 20 பேர் வீதம் மாதம், 200 பேருக்கு பயிற்சி தருகிறோம். 3 'லெவலாக' தொடர்ந்து பயிற்சி பெறலாம். அடுத்த, 3 மாதத்தில் டெய்லரிங் மற்றும் அழகுக்கலை பயிற்சியும் பெண்களுக்கு வழங்க முயற்சித்துள்ளேன். இவ்வாறு கூறினார். நிகழ்ச்சியில் எம்.பி., அந்தியூர் செல்வராஜ், மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.