யானை தாக்கியதில் விவசாயி படுகாயம்
யானை தாக்கியதில் விவசாயி படுகாயம்
யானை தாக்கியதில் விவசாயி படுகாயம்
ADDED : டிச 02, 2025 02:51 AM
சத்தியமங்கலம், தாளவாடி அருகே கும்டாபுரத்தை சேர்ந்தவர் மாதேவப்பா, 72; இக்கலூரில் உள்ள தனது நிலத்தில் நேற்று முன்தினம் இரவு காவல் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது வந்த ஒரு யானை, மாதேவப்பாவை தக்கியதில் படுகாயமடைந்தார். தாளவாடி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக சாம்ராஜ் நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக தாளவாடி வனத்துறையினர், போலீசார் விசாரிக்கின்றனர்.


