Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/இன்ஜினியரிங் கல்லுாரியில் தொழில் முனைவோர் மாநாடு

இன்ஜினியரிங் கல்லுாரியில் தொழில் முனைவோர் மாநாடு

இன்ஜினியரிங் கல்லுாரியில் தொழில் முனைவோர் மாநாடு

இன்ஜினியரிங் கல்லுாரியில் தொழில் முனைவோர் மாநாடு

ADDED : மார் 24, 2025 06:43 AM


Google News
ஈரோடு: கோபி அருகே ஒத்தக்குதிரை வெங்கடேஸ்வரா ஹைடெக் இன்ஜினியரிங் கல்லுாரியில், சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர் மாநாடு நடந்தது. கல்லுாரி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கருப்பண்ணன் எம்.எல்.ஏ., தலைமை வகித்து தொடங்கி வைத்தார். தனியார் நிறுவன முதன்மை அதிகாரி ஆச்சர், சிறு குறு நடுத்தர தொழில் மேம்பாட்டு சென்னை மைய பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்குமார், பழனிச்சாமி பேசினர். சிறப்பாக செயல்பட்டு வரும் நிறுவனங்களுக்கு விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

நிகழ்வில் கல்லுாரி தலைவர் வெங்கடாசலம், இணை செயலாளர் கெட்டிமுத்து, தலைமை நிர்வாக அதிகாரி கவுதம், இயக்குனர் கவியரசு, சிறுகுறு நிறுவன நிர்வாகிகள் மேலாண்மை துறை மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கல்லுாரி முதல்வர் தங்கவேல் வரவேற்றார். எந்திரவியல் துறை தலைவர் மோகன்குமார் நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us