/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரயில் முன் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலி ரயில் முன் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலி
ரயில் முன் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலி
ரயில் முன் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலி
ரயில் முன் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலி
ADDED : ஜூன் 12, 2025 01:45 AM
ஈரோடு, ஈரோடு சூரம்பட்டி வலசை சேர்ந்த அசோக் குமார் மகன் மதன் குமார், 22. எலக்ட்ரீஷியன், பி.காம்., சி.ஏ. படித்துள்ளார். இவரது பெற்றோர் பிரிந்து வாழ்கின்றனர்.
இவர்களை சேர்த்து வைக்க மதன் குமார் சில மாதங்களாக முயற்சித்தார். ஆனால் அது பலனிக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்தார். கடந்த, 9ம் தேதி இரவு ரங்கம்பாளையத்தில் உள்ள தண்டவாளத்தில், ரயில் வந்தபோது குறுக்கே சென்றார். இதில் சிறிது துாரம் இழுத்து சென்று உடல் நசுங்கி இறந்ததாக, ஈரோடு ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.