ADDED : ஜூன் 17, 2025 02:14 AM
சத்தியமங்கலம், கடம்பூர் அருகே கிழாத்துாரை சேர்ந்தவர் ராஜீ, 79; நேற்று முன்தினம் காலை மாடுகளை, வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றார். மாலையில் மாடுகள் மட்டும் வீடு திரும்பின.
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், நேற்று காலை வனப்பகுதியில் தேடினர். அப்போது யானை மிதித்து இறந்து கிடந்தார். உடலை கைப்பற்றி சத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கடம்பூர் வனத்துறையினர், போலீசார் விசாரிக்கின்றனர்.