/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கள்ளச்சாராயம் காய்ச்சிய தி.மு.க., கவுன்சிலர் கைது கள்ளச்சாராயம் காய்ச்சிய தி.மு.க., கவுன்சிலர் கைது
கள்ளச்சாராயம் காய்ச்சிய தி.மு.க., கவுன்சிலர் கைது
கள்ளச்சாராயம் காய்ச்சிய தி.மு.க., கவுன்சிலர் கைது
கள்ளச்சாராயம் காய்ச்சிய தி.மு.க., கவுன்சிலர் கைது
ADDED : செப் 13, 2025 09:27 PM
ஈரோடு:கள்ளச்சாராயம் காய்ச்சிய வழக்கில், தி.மு.க., கவுன்சிலர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு மாவட்டம், குட்டையக்காடு அப்புசாமி தோட்டத்தில்,காஞ்சிகோவில் போலீசார் நடத்திய சோதனையில், 7 லிட்டர் கள்ளச்சாராயம் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், அங்கிருந்த 8 கிலோ வெள்ளை வேலம்பட்டை, ஒரு மண் பானை, இரு பிளாஸ்டிக் பேரல்கள், காஸ் அடுப்பு, காஸ் டிரம், மூன்று ஈய அண்டாக்கள், இரு பிளாஸ்டிக் குடங்கள், ரப்பர் டியூப், சில்வர் குண்டாவில் 3 லிட்டர் திராட்சை பழ ரசம், சில்வர் பேஷன், விவோ போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக, கோவில்பாளையத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார், 42, வள்ளி நகரைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி முத்துசாமி, 50, ஆகிய இருவரை, ஈரோடு மதுவிலக்கு போலீசில் ஒப்படைத்தனர். இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இதில், சுரேஷ்குமார், பெத்தாம்பாளையம் பேரூராட்சி தி.மு.க., கவுன்சிலராகவும், பெருந்துறை கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளராகவும் உள்ளார்.