ADDED : ஜூன் 07, 2025 01:19 AM
பவானி, நசியனுார் அருகே சாமிகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் மயில்சாமி. இவரின் மனைவி ரேவதி, 36; அதே பகுதியில் கட்டட வேலை செய்கின்றனர். தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர். 15 வயதான மூத்த மகள் வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் இருந்துள்ளார்.
இதை தாய் ரேவதி கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த சிறுமி, வீட்டை விட்டு வெளியேறி விட்டார். புகாரின்படி சித்தோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.