ADDED : செப் 14, 2025 05:12 AM
ஊத்தங்கரை:ஊத்தங்கரை அடுத்த, பள்ளத்துாரை சேர்ந்தவர் முத்துராமன், 50. நேற்று காலை வனப்பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டி-ருந்தார்.
அப்போது வெடிச்சத்தம் கேட்டது. அங்கு சென்று பார்த்த போது, காட்டுப்பன்றிக்கு வைத்த வெடியை பசு மாடு கடித்ததால், அதன் வாய் கிழிந்து, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியது. சிங்காரப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.