Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நீர்ப்பாசன தொட்டியில் குளித்த சிறுவன் பலி

நீர்ப்பாசன தொட்டியில் குளித்த சிறுவன் பலி

நீர்ப்பாசன தொட்டியில் குளித்த சிறுவன் பலி

நீர்ப்பாசன தொட்டியில் குளித்த சிறுவன் பலி

ADDED : ஜூன் 08, 2025 01:05 AM


Google News
காங்கேயம், காங்கேயத்தை அடுத்த ரங்காபாளையம், ஆசாத் நகரை சேர்ந்த உமர்பாரூக் மகன் முகமது உவைஸ் கமல், 15; பிளஸ் ௧ படித்தார்., நண்பர்களுடன் சிவகிரிபுதுாரில் உள்ள ஜெயச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில், 15 அடி ஆழ கொண்ட நீர்ப்பாசன தொட்டியில் குளித்தார். நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார்.

அப்பகுதியினர் உதவியுடன் மீட்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us