/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பவானிசாகர் நீர்மட்டம் 83.86 அடியாக உயர்வு பவானிசாகர் நீர்மட்டம் 83.86 அடியாக உயர்வு
பவானிசாகர் நீர்மட்டம் 83.86 அடியாக உயர்வு
பவானிசாகர் நீர்மட்டம் 83.86 அடியாக உயர்வு
பவானிசாகர் நீர்மட்டம் 83.86 அடியாக உயர்வு
ADDED : ஜூன் 16, 2025 03:39 AM
புன்செய்புளியம்பட்டி: பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியான, நீலகிரி மாவட்ட மலைப்பகுதி மற்றும் அணை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மூன்று நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக, அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகி-றது.
நேற்று முன்தினம், 2,522 கன அடியாக இருந்த நீர்வரத்து, 5,855 கன அடியாக நேற்று அதிகரித்தது. இதனால் அணை நீர்-மட்டம், 83.86 அடியாக நேற்று உயர்ந்தது. நீர் இருப்பு, 17.8 டி.எம்.சி.,யாக உள்ளது. அணையில் இருந்து அரக்கன்கோட்டை--தடப்பள்ளி பாசனத்துக்கு, 700 கன அடி மற்றும் குடிநீருக்காக, 150 கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.