ADDED : ஜூலை 05, 2025 01:33 AM
ஈரோடு, ஈரோடு மாநகராட்சி, 42வது வார்டில், வி.வி.சி.ஆர்.நகர் அருகே செல்லும் வாய்க்கால் கரையில், மின் கம்பம் உள்ளது. கம்பத்தில் இருந்து வீடுகள், விவசாயத்துக்கு பல்வேறு இணைப்பு தரப்பட்டுள்ளது.
அருகில் உள்ள நிலத்தில் விளையும் வாழை மரங்கள் கம்பத்தில் சாய்ந்து நிற்க, அதன் மீது செடி, கொடிகள் படர்ந்து ஆக்கிரமித்துள்ளன. இதனால் மின் கம்பம் புதர் கம்பமாகி விட்டது. விபத்து நிகழும் முன் உரிய நடவடிக்கை எடுக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.