Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஈரோடு கால்நடை சந்தையில் 90 சதவீத மாடுகள் விற்பனை

ஈரோடு கால்நடை சந்தையில் 90 சதவீத மாடுகள் விற்பனை

ஈரோடு கால்நடை சந்தையில் 90 சதவீத மாடுகள் விற்பனை

ஈரோடு கால்நடை சந்தையில் 90 சதவீத மாடுகள் விற்பனை

ADDED : ஜூலை 05, 2024 03:01 AM


Google News
ஈரோடு,:ஈரோடு, கருங்கல்பாளையத்தில் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டுச்சந்தை நடக்கும். நேற்று முன்தினம் நடந்த சந்தையில், நுாற்றுக்கும் மேற்பட்ட கன்றுகள், மாடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். அவை, 8,000 ரூபாய் முதல், 26,000 ரூபாய் வரை விற்பனையானது. நேற்று நடந்த சந்தையில் ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், திருவண்ணாமலை, தேனி மாவட்டங்களில் இருந்து மாடுகளை, விவசாயிகள் கொண்டு வந்தனர்.

இதில், 6,000 ரூபாய் முதல், 24,000 ரூபாய் மதிப்பில், 50 கன்றுகள்; 36,000 ரூபாய் முதல், 85,000 ரூபாய் மதிப்பில், 300 பசு மாடுகள்; 28,000 ரூபாய் முதல், 65,000 ரூபாய் மதிப்பில், 250 எருமை மாடுகள்; தவிர, 65,000 ரூபாய்க்கு மேலான விலையில், கலப்பின மாடுகளும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

தமிழகத்தின் பல்வேறு பகுதி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மஹராஷ்டிரா மாநில வியாபாரிகள், விவசாயிகள் மாடுகளை ஆர்வமாக வாங்கி சென்றனர். நேற்று வரத்தான மாடுகளில், 90 சதவீதம் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us