ADDED : செப் 12, 2025 02:01 AM
பவானி, பவானி, ராஜகணபதி சாலையில் வசிப்பவர் பரூக் அலி, 78; வாட்ச் பழுது பார்க்கும் கடை வைத்து நடத்துகிறார். திருமணமாகி மனைவி உட்பட இரண்டு மகன்கள் உள்ளனர். எட்டு வயது சிறுமியிடம் பிஸ்கட் கொடுத்து, ஆசை வார்த்தை கூறி, நேற்று முன்தினம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.
சிறுமி பெற்றோரிடம் கூறவே அதிர்ச்சி அடைந்த அவர்கள், பவானி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். விசாரணையை தொடர்ந்து, போக்சோ வழக்கில் பரூக் அலியை கைது செய்தனர். ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர்.