ADDED : அக் 02, 2025 12:48 AM
பவானி:பவானி அடுத்த புன்னம், ஓனான்கரடு பகுதியில், சிலர் சடடவிரோதமாக சேவல் சன்டை நடத்தி வருவதாக அப்பகுதியினர், ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், டி.என்.பாளையத்தை சேர்ந்த, மதிவாணன்,25, கோபி வடக்கு வீதியை சேர்ந்த, விக்னேஷ்,24, கர்நாடகா மாநிலம் ராமபுரத்தை சேர்ந்த சண்முகம்,24, அதே பகுதியை சேர்ந்த, நவீன்குமார், 24, ஆகியோரை கைது செய்து விசாரித்தனர். அவர்களிடம் இருந்து இரு சேவல்களை பறிமுதல் செய்தனர்.


