Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 3 ரயில்வே நுழைவு பாலம் விரிவாக்கம் எப்போது?

3 ரயில்வே நுழைவு பாலம் விரிவாக்கம் எப்போது?

3 ரயில்வே நுழைவு பாலம் விரிவாக்கம் எப்போது?

3 ரயில்வே நுழைவு பாலம் விரிவாக்கம் எப்போது?

ADDED : டிச 01, 2025 03:15 AM


Google News
Latest Tamil News
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் மூன்று ரயில்வே நுழைவு பாலங்களை விரிவாக்கம் செய்ய, தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஒப்புதலை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஈரோடு சென்னிமலை சாலையில் கே.கே.நகர் ரயில்வே நுழைவு பாலம் உள்ளது. நகர வளர்ச்சிக்கு நுழைவு பால வழித்தடம் போதுமானதாக தற்போது இல்லை. வாகனங்கள் எளிதில் சென்று வர முடிவதில்லை. இதனால் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பீக் அவர்சில் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகின்றனர்.

இதேபோல் சாவடிபாளையம் அருகே கேட்புதுார் ரயில்வே நுழைவு பாலம் சிறியதாக உள்ளது. இந்த பாலம் வழியாகவே கரூர், திருச்சி மற்றும் தென் மாவட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டும். வாகனங்கள் வந்து செல்ல இது ஒரே வழி தான் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் குறிப்பாக பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் பாரத்தை ஏற்றி செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. வெள்ளோடு ஆர்.எஸ்.பகுதியிலும் ரயில்வே நுழைவு பாலம் இதே நிலையில் தான் உள்ளது. இந்த மூன்று பாலத்தையும் விரிவாக்கம் செய்ய, ரயில்வே நிர்வாகத்திடம் பொதுமக்கள், பல்வேறு அமைப்புகள், வர்த்தகர்கள், அரசியல் கட்சியினர் தொடர்ந்து முன் வைத்து வருகின்றனர். இம்மூன்று பாலங்களிலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் முறையான, முழுமையான ஆய்வு கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் மூன்று பாலங்களையும் விரிவாக்கம் செய்து மக்கள் பிரதிநிதிகள், ரயில்வே போர்டு உறுப்பினர்கள் வாயிலாக, தென்னக ரயில்வே பொது மேலாளர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதுகுறித்து கடிதமும் அளிக்கப்பட்டுள்ளது. தென்னக ரயில்வே பொது மேலாளர் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால், மூன்று பாலங்களையும் விரிவாக்கம் செய்வதற்கான ஒப்புதலை அளிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us