ADDED : ஜூன் 01, 2025 01:24 AM
கொடுமுடி, கொடுமுடி, தாமரைபாளையம், அனில்காட்டு தோட்டத்தில் சூதாட்டம் நடப்பதாக, கொடுமுடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சென்று பார்த்த போது, 11 பேர் சீட்டாடி கொண்டிருந்தனர்.
கொடுமுடி, வடக்கு புதுபாளையம் முத்துகுமார், 34, கார்த்திக், 45; வெள்ளோட்டம்பரப்பு அன்னமார் கோவில் மாணிக்கம், 60, இவரின் மகன் மேகநாதன், 33; ஊஞ்சலுார் தெற்கு வீதி பாபு, 51; கொளாநல்லி, சத்திரம் முனியப்பன், 66, உள்பட, ௧௧ பேரை கைது செய்தனர்.