Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 10ம் வகுப்பு, பிளஸ் 1 துணைத்தேர்வு துவக்கம்

10ம் வகுப்பு, பிளஸ் 1 துணைத்தேர்வு துவக்கம்

10ம் வகுப்பு, பிளஸ் 1 துணைத்தேர்வு துவக்கம்

10ம் வகுப்பு, பிளஸ் 1 துணைத்தேர்வு துவக்கம்

ADDED : ஜூலை 04, 2025 01:00 AM


Google News
ஈரோடு, பிளஸ் 1 துணைத்தேர்வு இன்று துவங்கி வரும், 11ம் தேதி வரை நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் பவானி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில்-94, ஈரோடு செங்குந்தர் பள்ளியில்- 153, கோபி பழனியம்மாள் பெண்கள் மேல்நிலை பள்ளியில்-105, சத்தி பெண்கள்

மேல்நிலை பள்ளியில்-12, பவானி பெண்கள் மேல்நிலை பள்ளியில்-22, ஈரோடு கலைமகள் கல்வி நிலைய பள்ளியில்- 39, கோபி வைர விழா மேல்நிலை பள்ளியில்-6 பேர் என, 431 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதேபோல் பத்தாம் வகுப்பு துணைத்தேர்வும் இன்று தொடங்கி, 10ம் தேதி வரை நடக்கிறது. பத்தாம் வகுப்பு தேர்வெழுத, ௨,௧௮௯ பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு ஏழு மையம் அமைக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us