Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அத்தாணியில் சிக்கிய 10 அடி நீள மலைப்பாம்பு

அத்தாணியில் சிக்கிய 10 அடி நீள மலைப்பாம்பு

அத்தாணியில் சிக்கிய 10 அடி நீள மலைப்பாம்பு

அத்தாணியில் சிக்கிய 10 அடி நீள மலைப்பாம்பு

ADDED : டிச 01, 2025 03:20 AM


Google News
பவானி:Lபவானியை அடுத்த அத்தாணி, காமராஜபுரம் பகுதியில், பெருமாபாளையம் வனப்பகுதியில், இருந்து வரும் வெள்ளம் பவானி ஆற்றில் கலக்கிறது. இந்தப் வெள்ளம் வழியாக வந்த ஒரு மலைப்பாம்பு ஒரு வாரமாக அப்பகுதியில் நடமாடியது.

அத்தாணி, காமராஜபுரம் பகுதியில் மாடி வீட்டின் மேல் இருந்த ஒரு சிறுவன் பாம்பு உள்ளதை நேற்று மதியம் பார்த்து சத்தம் போட்டுள்ளான். அக்கம்பக்கத்தினர் அந்தியூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு நிலைய வீரர்கள் அப்பகுதி இளைஞர்கள் சேர்ந்து, 10 அடி நீள மலைப்பாம்பை பிடித்து, அத்தாணி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அத்தாணி வனப்பகுதியில் உள்ள கொம்பு துாக்கி அம்மன் கோவில் பகுதியில் மலைப்பாம்பை கொண்டு சென்று விட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us