ADDED : ஜூலை 18, 2024 01:21 AM
சத்தியமங்கலம்: தாளவாடி அருகே உள்ள கொங்கள்ளியை சேர்ந்தவர் மாதேவ-சாமி, 35; கட்டிடதொழிலாளி. மைசூரில் தங்கி வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி லட்சுமி,25. இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் மாதேவசாமி மனைவிக்கு பணம் அனுப்பி வைத்துள்ளார்.
மனைவி மீண்டும் பணம் கேட்டுள்ளார். அப்போது இருவ-ருக்கும் போனில் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் ஜூலை 15ம்தேதி போன் செய்து விசாரித்த போது மனைவி மற்றும் குழந்-தையை காணவில்லை என உறவினர்கள் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் தன் மனைவி மற்றும் 3 வயது பெண் குழந்-தையை காணவில்லை என தாளவாடி போலீசில் மாதேவசாமி புகாரளித்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.