ADDED : ஜூன் 23, 2024 02:35 AM
ஈரோடு;திருநங்கைகள், திருநம்பிகளுக்கான சிறப்பு முகாம், ஈரோடு மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் நடந்தது.
இதில், ௧௪ திருநங்கைகள் அடையாள அட்டை கோரியும், ௧6 பேர் ஆதார் அட்டையில் திருத்தம் செய்யவும், 10 பேர் புதிய வாக்காளர் அடையாள அட்டை பெறவும், 12 பேர் வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்யவும், காப்பீடு திட்டம் மற்றும் பிரதம மந்திரியின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தில் இணைய, 8 பேர் என, 60 பேர் விண்ணப்பித்தனர். இதில் ஏழு திருநங்கைகளுக்கு அடையாள அட்டையை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வழங்கினார்.