Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஆடிட்டர் வீட்டில் திருடியோர் கைது 90 பவுன் நகை, பணம் மீட்பு 90 பவுன் நகை, 19 லட்சம் ரூபாய் மீட்பு

ஆடிட்டர் வீட்டில் திருடியோர் கைது 90 பவுன் நகை, பணம் மீட்பு 90 பவுன் நகை, 19 லட்சம் ரூபாய் மீட்பு

ஆடிட்டர் வீட்டில் திருடியோர் கைது 90 பவுன் நகை, பணம் மீட்பு 90 பவுன் நகை, 19 லட்சம் ரூபாய் மீட்பு

ஆடிட்டர் வீட்டில் திருடியோர் கைது 90 பவுன் நகை, பணம் மீட்பு 90 பவுன் நகை, 19 லட்சம் ரூபாய் மீட்பு

ADDED : ஜூலை 09, 2024 08:40 PM


Google News
ஈரோடு:ஈரோட்டில் ஆடிட்டர் வீட்டில், 235 பவுன் தங்க நகைகள், 48 லட்சம் ரூபாய் பணம் திருடிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 90 பவுன் நகை, ௧௯ லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு சூரம்பட்டி என்.ஜி.ஜி.ஓ. காலனி ஏழாவது வீதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி, 69. ஆடிட்டரான இவரது வீட்டில் கடந்த மாதம் ௮ம் தேதி இரவு, 235 பவுன் தங்க நகை, 48 லட்சம் ரூபாய் பணம் திருட்டு போனது. சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஆலப்பள்ளி ரோடு, திருமலை நகர் ரியல் எஸ்டேட் அதிபர் அருண்குமார், 36, வேலுார் மாவட்டம் குடியாத்தம் மோடிகுப்பம், ஆர்.கொளப்பள்ளி மாரியம்மன் கோவில் தெரு விக்னேஷ், 24, ஆடிட்டரிடம் டிரைவராக இருந்த ஈரோடு திண்டல் காரப்பாறை மெடிக்கல் நகரைச் சேர்ந்த சத்யன், 34, ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 90 பவுன் தங்க நகைகள், 19 லட்சம் ரூபாய் பணம் மற்றும் ஒரு கார் ஆகியவை மீட்கப்பட்டன.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: திருட்டுக் கும்பல் வந்து சென்ற கார் கண்காணிப்புக் கேமராவில் பதிவாகி இருந்தது.

அதன் எண்ணை வைத்து விசாரணையைத் துவக்கினோம். மேலும், மொபைல் டவரில் பதிவான எண்ணை கொண்டு திருட்டுக்கு உடந்தையாக இருந்தவர்களைப் பிடித்துள்ளோம்.

திருட்டில் நேரடியாக ஈடுபட்டவர் மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்து தலைமறைவாகி உள்ளார். விரைவில் அவரை பிடிப்போம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us