/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வந்தவர் கலெக்டர் ஆபீசில் மயங்கி விழுந்து சாவு உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வந்தவர் கலெக்டர் ஆபீசில் மயங்கி விழுந்து சாவு
உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வந்தவர் கலெக்டர் ஆபீசில் மயங்கி விழுந்து சாவு
உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வந்தவர் கலெக்டர் ஆபீசில் மயங்கி விழுந்து சாவு
உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வந்தவர் கலெக்டர் ஆபீசில் மயங்கி விழுந்து சாவு
ADDED : ஜூலை 26, 2024 02:37 AM
ஈரோடு: கோபி, கோட்டுபுல்லாம்பாளையம், காமராஜர் நகரை சேர்ந்-தவர் மசையப்பன், 72, கூலி தொழிலாளி. முதியோர் உதவித்தொ-கையாக மாதம், 1,000 ரூபாய் பெற்று வருகிறார். இவருக்கு வளர்மதி, சித்ரா, தேன்மொழி என மூன்று மகள்கள் உள்ளனர். ஒரு விபத்தில் இவரது வலது கையில் அதிக பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை வழங்க கோரி விண்ணப்பம் செய்ய திட்டமிட்டார். இதற்காக நேற்று காலை, 11:00 மணிக்கு இரண்டாவது மகள் சித்ராவுடன், ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அலுவல் மருத்துவ-ரிடம் மாற்றுத்திறனாளிக்கான சான்றிதழ் வழங்க கோரினார். விபத்தால் ஏற்பட்ட பாதிப்பு என்பதுடன், பாதிப்பின் அளவு குறைவாக உள்ளதால், சான்றிதழ் வழங்க இயலாது என மருத்-துவர் மறுத்துள்ளார்.
அங்கிருந்து கலெக்டர் அலுவலகம் வந்து, மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் விபரம் கூறி, தனக்கு மாற்று யோசனை வழங்க கேட்டுள்ளார். மதியம், 12:30 மணி அளவில் சிறுநீர் கழிப்பதற்-காக கலெக்டர் அலுவலக நவீன கழிப்பறைக்கு சென்றவர் மயங்கி விழுந்தார்.
அங்கிருந்தவர்கள் தெரிவித்த தகவலின்படி, ஆம்புல்ன்ஸ் வாகனம் வரவழைக்கப்பட்டது. அதில் வந்த மருத்துவ ஊழியர் பரிசோதித்தபோது, அவர் இறந்து விட்டது தெரிய வந்தது. இதை-யடுத்து ஈரோடு அரசு மருத்துவமனைக்கு, சடலம் அனுப்பி வைக்-கப்பட்டது. இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.