/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 'பஸ் ஸ்டாண்டில் மீண்டும் வேகத்தடை அமைக்கணும்' 'பஸ் ஸ்டாண்டில் மீண்டும் வேகத்தடை அமைக்கணும்'
'பஸ் ஸ்டாண்டில் மீண்டும் வேகத்தடை அமைக்கணும்'
'பஸ் ஸ்டாண்டில் மீண்டும் வேகத்தடை அமைக்கணும்'
'பஸ் ஸ்டாண்டில் மீண்டும் வேகத்தடை அமைக்கணும்'
ADDED : ஜூன் 28, 2024 01:50 AM
கொடுமுடி, ஈரோடு - கரூர் பைபாஸ் சாலையில் கொடுமுடி பஸ் ஸ்டாண்ட் உள்ளது. பஸ் ஸ்டாண்ட் உள்ளே செல்ல, வெளியே வர என இரு வழி உள்ளது. இரு வழிகளிலும் வேகத்தடை அமைக்கப்பட்டிருந்தது. இதில் வெளியே வரும் வழியில் இருந்த வேகத்தடையை யாரோ இடித்து அகற்றி விட்டனர்.
இதனால் பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியே வரும் பஸ்கள் வேகமாக வந்து பைபாஸ் சாலையில் நுழைகின்றன. இதனால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. இதை தவிர்க்க மீண்டும் வேகத்தடை அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.