Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மலை கிராமத்தில் 5 பேர் பலி ஈரோடு மாவட்டத்தில் அதிர்ச்சி

மலை கிராமத்தில் 5 பேர் பலி ஈரோடு மாவட்டத்தில் அதிர்ச்சி

மலை கிராமத்தில் 5 பேர் பலி ஈரோடு மாவட்டத்தில் அதிர்ச்சி

மலை கிராமத்தில் 5 பேர் பலி ஈரோடு மாவட்டத்தில் அதிர்ச்சி

ADDED : ஜூன் 08, 2024 02:06 AM


Google News
சத்தியமங்கலம்:மலை கிராமத்தில் அடுத்தடுத்து ஐந்து பேர் பலியானது, ஈரோடு மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த, ஆசனுார் அருகே, தடசலட்டி, இட்டரை மலை கிராமங்களில் ஒரு வாரமாக வாந்தி-பேதி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக இட்டரை கிராமத்தில் நேற்று கேளன் என்பவர் இறந்து போனார். அதேசமயம் தடசலட்டியில் மாரே, மாதி, ரங்கன், கவுரி என நான்கு பேர் அடுத்தடுத்து இறந்துள்ளனர்.

மேலும் பாதிப்பு ஏற்பட்டவர்கள் தாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சத்தி அரசு மருத்துவமனை மற்றும் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையறிந்த மருத்துவ குழுவினர், தடசலட்டி, இட்டரை கிராமத்துக்கு விரைந்தனர். மக்களுக்கு மருந்து, மாத்திரை கொடுத்துள்ளனர். மக்கள் குடிக்க பயன்படுத்திய நீர் மாதிரியை சேகரித்து, ஆய்வுக்கும் அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மலைகிராம மக்கள் கூறியதாவது:

மருத்துவ குழுவினர் மருந்து, மாத்திரை கொடுத்து, ரத்த பரிசோதனை செய்கின்றனர். ஆனால், இதுவைர ஐந்து பேர் என்ன காரணத்தால் இறந்தனர் என்பதை சொல்லவில்லை. தடசலட்டி கிராமத்தில் மின் வினியோகம் தடைபட்டதால், 16 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

இதனால் ஆங்காங்கே குளம், குட்டையில் தேங்கிய நீரை, குடிநீருக்கு மக்கள் பயன்படுத்தியுள்ளனர். இதனால் வாந்தி-பேதி ஏற்பட்டிருக்கலாம். சுகாதாரமான குடிநீர் வழங்க, மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us