Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ உள் ஒதுக்கீட்டை உயர்த்த கோரிக்கை

உள் ஒதுக்கீட்டை உயர்த்த கோரிக்கை

உள் ஒதுக்கீட்டை உயர்த்த கோரிக்கை

உள் ஒதுக்கீட்டை உயர்த்த கோரிக்கை

ADDED : ஆக 06, 2024 01:45 AM


Google News
ஈரோடு, ஆஅருந்ததியர் சமூகத்துக்கான தனி உள் இட ஒதுக்கீட்டை, 6 சதவீதமாக உயர்த்தி வழங்க, சமூக நீதி மக்கள் கட்சி மற்றும் மாவீரன் பொல்லான் பேரவை நிறுவன தலைவர் வடிவேல் ராமன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த, 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், நீதிபதி ஜனார்த்தனம் ஆணையம், அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்தது. எதிர்காலத்தில் மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கலாம் எனவும் பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில் தற்போதைய, 3 சதவீத தனி உள் இட ஒதுக்கீட்டை, 6 சதவீதமாக உயர்த்தி வழங்க, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us