ADDED : ஆக 05, 2024 01:53 AM
கோபி, கோபி அருகே கொங்கர்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி, 60; சத்தி சாலையில் ஆசாரிமேடு என்ற இடத்தில், நேற்று முன்தினம் இரவு நடந்து சென்றார்.
அப்போது வந்த ஹூண்டாய் கார் மோதியதில் காயமடைந்தார். சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். பழனிச்சாமி மகன் பார்த்தீபன் கொடுத்த புகாரின்படி, கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.