ADDED : ஜூன் 14, 2024 01:21 AM
கோபி, சேலம் மாவட்டம் இடைப்பாடி நகராட்சி கமிஷனரான சசிகலா, கோபி நகராட்சி கமிஷனராக, 2023 ஜூலை 3ல் பொறுப்பேற்றார்.
அவர் தற்போது குன்னுார் நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதேசமயம் திருவள்ளூர் நகராட்சி கமிஷனர் சுபாஷினி, கோபி நகராட்சி கமிஷனராக நேற்று மாலை பொறுப்பேற்று கொண்டார். நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.