ADDED : ஜூன் 17, 2024 01:18 AM
காங்கேயம்: தமிழகத்தில் கொடி முருங்கை, செடி முருங்கை, மரமுருங்கை, செம்முருங்கை என நான்கு வகைகள் உள்ளன.
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில், முத்துார், காங்கயம், புதுப்பை
பகுதிகளில் செடி முருங்கை, மரமுருங்கை ஆகியவை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. வெள்ளகோவிலில் இயங்கும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு, சுற்று வட்டார பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவித்த முருங்கை காய்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
இதனை வியாபாரிகள் வாங்கி கோவை, சென்னை மார்க்கெட்டுக்கு அனுப்பு
கின்றனர். மேலும் அருகில் உள்ள ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கும் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு செல்வர். நேற்று மூன்று டன் வரத்தானது, முருங்கை கிலோ, 55 ரூபாய்க்கு
விற்பனையானது.