Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

ADDED : ஆக 06, 2024 01:45 AM


Google News
ஈரோடு, ஈரோடு யூனியனில் உள்ள ஆறு பஞ்சாயத்துக்களையும், மாநகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிடக்கோரி, யூனியன் அலுவலகம் முன், மா.கம்யூ., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர். தாலுகா செயலாளர் பாலசுப்பிரமணி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ரகுராமன் முன்னிலை வகித்தார்.

பஞ்சாயத்துக்களை மாநகராட்சியுடன் இணைத்தால், தற்போது செயல்படுத்தப்படும் நுாறு நாள் வேலை திட்டப்பணி முற்றிலும் நிறுத்தப்படும். எனவே இந்த பஞ்சாயத்துக்களை மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என வலியுறுத்தி போராட்டம் செய்து, யூனியன் அலுவலகத்தில் மனு வழங்கினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பழனிசாமி, கோரதி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் விஜயராகவன் உட்பட பலர் பேசினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us