Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஓடும் பஸ்சில் மொபைல் திருடிய களவாணி கைது

ஓடும் பஸ்சில் மொபைல் திருடிய களவாணி கைது

ஓடும் பஸ்சில் மொபைல் திருடிய களவாணி கைது

ஓடும் பஸ்சில் மொபைல் திருடிய களவாணி கைது

ADDED : ஜூலை 09, 2024 02:36 AM


Google News
ஈரோடு;சிவகிரி, பட்டேல் வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார், 36; பெங்களூரு கல்லுாரி பேராசிரியர். சிவகிரியில் இருந்து ஈரோடு ஜி.ஹெச்.,சுக்கு தனியார் டவுன் பஸ்சில் நேற்று வந்தார். பஸ்சில் இருந்து இறங்கியபோது அவர் வைத்திருந்த கைப்பையை காணவில்லை. அதில் மொபைல் போன், ஆப்பிள் ஐ-பேடு வைத்திருந்தார். இதுகுறித்து ஜி.ஹெச்., போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தார்.

விசாரணை நடத்திய போலீசார், கொடுமுடி, சோளிகாளிபாளையம் ரோடு கறிக்கடை வீதியை சேர்ந்த ரங்கராவ் மகன் ராமச்சந்திரன், 20, என்பவரை கைது செய்தனர். மொபைல் போன், ஐ-பேடை மீட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ராமச்சந்திரனை, ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us