ADDED : ஆக 02, 2024 02:07 AM
சென்னிமலை, சென்னிமலை சிறப்பு நிலை பேரூராட்சியின், புதிய செயல் அலுவலராக மகேந்திரன் நேற்று பொறுப்பேற்று கொண்டார்.
இவர், சிவகிரி தேர்வு நிலை பேரூராட்சியில் செயல் அலுவலராக பணியாற்றி, பதவி உயர்வு பெற்று சென்னிமலை சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலராக பொறுப்பேற்று கொண்டார். இவருக்கு சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக், துணைத் தலைவர் சவுந்தர்ராஜன் ஆகியோர் கைத்தறி ஆடை கொடுத்து வரவேற்றனர்.