Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோடு மாநகராட்சியில் வரி வசூலை தீவிரப்படுத்த முடிவு

ஈரோடு மாநகராட்சியில் வரி வசூலை தீவிரப்படுத்த முடிவு

ஈரோடு மாநகராட்சியில் வரி வசூலை தீவிரப்படுத்த முடிவு

ஈரோடு மாநகராட்சியில் வரி வசூலை தீவிரப்படுத்த முடிவு

ADDED : ஜூன் 06, 2024 04:13 AM


Google News
ஈரோடு: சொத்து, குடிநீர், குத்தகை உள்ளிட்ட வரியினங்களை வசூலிக்கும் பணிகளை வரும், 10ம் தேதியில் இருந்து தீவிரப்படுத்த, ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.ஈரோடு மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களிலும் சொத்துவரி, காலியிட வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, பாதாள சாக்கடை கட்டணம், திடக்கழிவு மேலாண்மை கட்டணம் மற்றும் குத்தகை இன வரி உள்ளிட்ட வரிகள் வசூலிக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு மாநகராட்சியில் மொத்தம், 1 லட்சத்து, 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வரி செலுத்துகின்றனர். மாநகராட்சியில் சொத்து, குடிநீர், குத்தகை இனங்களில் இதுவரை, 82 சதவீதம் வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்திருந்தது. அதன்பின், ஈரோடு லோக்சபா தேர்தல் காரணமாக, வரி வசூலிக்கும் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது.இந்நிலையில், மீண்டும் வரியினங்களை வசூலிக்கும் பணிகளை வரும், 10 முதல் தீவிரப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us