Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ விவசாயிக்கு 'வெட்டு'

விவசாயிக்கு 'வெட்டு'

விவசாயிக்கு 'வெட்டு'

விவசாயிக்கு 'வெட்டு'

ADDED : ஜூன் 19, 2024 02:00 AM


Google News
பவானி, அம்மாபேட்டை அருகே சிங்கம்பேட்டையை அடுத்த கோனேரிப்பட்டி பிரிவு பூஞ்சோலை கொட்டகையை சேர்ந்தவர் குணசீலன், 62; விவசாய நிலத்தில் மனைவியுடன் பாக்கு மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது வந்த சொட்டையனுாரை சேர்ந்த குமார், வெள்ளித்திருப்பூரை சேர்ந்த கொமரசாமி, பவானி காடையாம்பட்டி சக்தி, சங்கரகவுண்டன்பாளையம் சரவணன் ஆகியோர், பயிர்களை சேதம் செய்துள்ளனர். கண்டித்த தம்பதியை தகாத வார்த்தை பேசி, பிளாஸ்டிக் குழாயால் அடித்துள்ளனர். மேலும் குணசீலனை அரிவாளால் குமார் வெட்டியுள்ளார். குணசீலன் புகாரின்படி, அம்மாபேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us