ADDED : ஜூலை 10, 2024 02:50 AM
கோபி;கோபி அருகே வெள்ளாங்கோயிலை சேர்ந்தவர் அண்ணாதுரை, 48, கட்டட தொழிலாளி.
கடந்த மாதம், 26ல் அதே பகுதியில் கீழ்பவானி வாய்க்கால் படிக்கட்டில் படுத்திருந்தவர் விழுந்து காயமடைந்தார். பெருந்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அவர் நேற்று இறந்தார். அண்ணாதுரை மனைவி விஜயா, 45, புகாரின்படி, சிறுவலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.