/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கோவிலில் கட்டுமான பணி வாக்குவாதத்தால் நிறுத்தம் கோவிலில் கட்டுமான பணி வாக்குவாதத்தால் நிறுத்தம்
கோவிலில் கட்டுமான பணி வாக்குவாதத்தால் நிறுத்தம்
கோவிலில் கட்டுமான பணி வாக்குவாதத்தால் நிறுத்தம்
கோவிலில் கட்டுமான பணி வாக்குவாதத்தால் நிறுத்தம்
ADDED : ஜூலை 24, 2024 09:50 PM
ஈரோடு:ஈரோடு, வீரப்பன்சத்திரத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாத விழா நடைபெறும். கோவிலுக்கு எதிரே காலியிடம் உள்ளது. இந்த இடம் மாநகராட்சிக்கு சொந்தமானது. மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மொட்டை அடிப்பதற்காகவும், திருவிழா சமயத்தில் முடி திருத்துவோர் தங்குவதற்காகவும், காலியிடத்தில் விழாக்குழு சார்பில் கட்டுமான பணிகள் நடந்தன.
இந்நிலையில் நேற்று அந்த இடத்துக்கு வந்த திராவிடர் விடுதலை கழகத்தினர் என்ற அமைப்பினர், கட்டுமான பணிகளை நிறுத்த கோரினர்; அங்கு நுாலகம் கட்ட முயற்சிப்பதாக கூறினர்.
இதனால் விழாக்குழுவினர் மற்றும் அந்த அமைப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தாசில்தார் முத்துகிருஷ்ணன் மற்றும் வடக்கு காவல்நிலைய போலீசார், இரு தரப்பினரிடையே சமரசம் செய்ய முயன்றனர். கட்டுமான பணிகள் நடக்கும் இடம், கோவிலுக்கு சொந்தமானது என விழா குழுவினர் கூறினர். அதை, அந்த அமைப்பினர் மறுத்தனர்.
இரு தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்த தாசில்தார் முத்துகிருஷ்ணன், ''ஆக., 1ல் அமைதி பேச்சு நடைபெறும். அதுவரை கட்டுமான பணிகள் மேற்கொள்ளக்கூடாது. இருதரப்பு நிர்வாகிகளும் அந்த பேச்சில் பங்கேற்க வேண்டும்,'' என்றார். அதையடுத்து இரு தரப்பினரும் கலைந்து சென்றனர்.