Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சோப்பு கரைசல் பக்கெட்டில் விழுந்த பெண் குழந்தை பலி

சோப்பு கரைசல் பக்கெட்டில் விழுந்த பெண் குழந்தை பலி

சோப்பு கரைசல் பக்கெட்டில் விழுந்த பெண் குழந்தை பலி

சோப்பு கரைசல் பக்கெட்டில் விழுந்த பெண் குழந்தை பலி

ADDED : ஜூன் 19, 2024 02:03 AM


Google News
கோபி, உத்திரபிரதேசம் மாநிலம், அலகாபாத்தை சேர்ந்தவர், பீம், 40. இவர் மனைவி ரீமா, 32, மற்றும் நான்கு மகள் மற்றும் ஒரு மகனுடன், ஈரோடு மாவட்டம், கோபி அருகே கெட்டிச்செவியூரில் குடும்பத்துடன் தங்கி, அதே பகுதியில் இயங்கும் நுாற்பாலையில் பணிபுரிந்து வருகிறார்.

நேற்று முன்தினம் காலை 7:30 மணிக்கு, ரீமா துணி துவைக்க பிளாஸ்டிக் பக்கெட்டில், சோப்பு கரைசலை கலந்து வைத்துவிட்டு, சமையல் வேலையை கவனிக்க வீட்டுக்குள் சென்றிருந்தார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, ரீமாவின் கடைசி மகளான, ராசி, என்ற ஒன்பது மாத பெண் குழந்தை, சோப்பு கரைசல் வைத்திருந்த பிளாஸ்டிக் பக்கெட்டுக்குள் தலைகுப்புற விழுந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த, பீமும் அவரது மனைவியும், குழந்தையை துாக்கி கொண்டு, சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை இறந்தது. ரீமா புகாரின்படி, சிறுவலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us