ADDED : ஜூன் 28, 2024 01:50 AM
ஈரோடு, ஜஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக கோபியில், 3.20 மி.மீ., மழை பதிவானது.
இதேபோல் கொடிவேரி, சத்தி, பவானிசாகரில் தலா, 2 மி.மீ., மழை பதிவானது. தென் மேற்கு பருவமழை காலமான தற்போது, மாவட்டத்தில் எதிர்பார்த்த மழை பெய்யவில்லை. லேசான சாரல் மழை மட்டுமே பெய்வதால் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.