ADDED : மே 04, 2026 03:42 AM
அ நிறம் | அளவு
பெருந்துறை:பெருந்துறையை
அடுத்த சுள்ளிபாளையத்தை சேர்ந்தவர் உதயகுமார், 42; சுமை துாக்கும்
கூலி தொழிலாளி. இவர் மனைவி செல்வி, 40; தம்பதிக்கு இரண்டு மகன்கள்
உள்ளனர்.
உதயகுமாருக்கு குடிப்பழக்கம் உள்ளதால், மனைவியுடன்
அடிக்கடி தகாராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு
இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த உதயகுமார்,
வீட்டுக்குள் சென்று துாக்கிட்டு கொண்டதில் இறந்து விட்டார்.
பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.
