ADDED : மே 01, 2026 05:24 AM
அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்:சத்தியமங்கலம் ரங்கசமுத்திரத்தை சேர்ந்தவர் சக்தி அஜய் கண்ணன். இரும்பு கடை வைத்து நடத்துகிறார். இவரின் மனைவி பவித்ரா, 34; சக்தி அஜய் கண்ணன் நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் மனைவியை மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் என வந்தது. இதனால் மாமனாருக்கு தகவல் தெரிவித்து, வீட்டுக்கு சென்று பார்க்குமாறு தெரிவித்துள்ளார். அவர் சென்று பார்த்தபோது பவித்ரா வீட்டில் இல்லை. இதுகுறித்த புகாரின்படி சத்தியமங்கலம் போலீசார், பவித்ராவை தேடி
வருகின்றனர்.





