ADDED : செப் 23, 2025 01:26 AM
புன்செய்புளியம்பட்டி, புன்செய் புளியம்பட்டி அருகே பனையம்பள்ளியில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. நேற்று காலை கோவில் கதவு பூட்டு உடைக்கப்பட்டும், உண்டியலும் உடைக்கப்பட்டு கிடந்தது.
புளியம்பட்டி போலீசார் விசாரணையில் அம்மன் கழுத்தில் இருந்த அரை பவுன் தங்க தாலி, 10க்கும் மேற்பட்ட குத்து விளக்கு, பித்தளை மணி, சமையலுக்கு பயன்படுத்தும் காஸ் சிலிண்டர், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய, 2,000 ரூபாய் திருட்டு போனது தெரிய வந்தது. கைவரிசை காட்டிய ஆசாமிகளை தேடி வருகின்றனர்.