Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஹோட்டலில் தீ இரவில் பரபரப்பு

ஹோட்டலில் தீ இரவில் பரபரப்பு

ஹோட்டலில் தீ இரவில் பரபரப்பு

ஹோட்டலில் தீ இரவில் பரபரப்பு

ADDED : ஜூலை 24, 2024 08:16 AM


Google News
ஈரோடு : ஈரோடு, கருங்கல்பாளையம், காந்தி சிலை அருகே கிருஷ்ணம்பா-ளையம் சாலையில், மகேந்திரா ஹோட்டல் உள்ளது.

நேற்றிரவு, 10 பணியாளர்கள் வேலையில் ஈடுபட்டிருந்தனர். எட்டு பேர் டிபன் சாப்பிட்டு கொண்டிருந்தனர். ஹோட்டல் போர்டுக்கு போட்டிருந்த சீரியல் லைட்டில் மின் கசிவு ஏற்பட்டது. கண்ணி-மைக்கும் நேரத்தில் பிளக்ஸ் பேனரில் தீப்பற்றி எரிந்தது. இதனால் பணியாளர்கள், சாப்பிட வந்த வாடிக்கையாளர்கள் அல-றியடித்து ஓட்டம் பிடித்தனர். தீ கொழுந்து விட்டு பல அடி உய-ரத்துக்கு எரிந்தது. தகவலறிந்த மின் வாரியத்தினர் மின் இணைப்பை துண்டித்தனர். தீயணைப்பு துறையினர், 45 நிமி-டங்கள் போராடி தீயை அணைத்தனர். விபத்தில் ஹோட்டலின் முன்புற பகுதி தீக்கிரையானது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us