/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ இரண்டாவது நாளாக 'உங்களை தேடி உங்கள் ஊரில்' இரண்டாவது நாளாக 'உங்களை தேடி உங்கள் ஊரில்'
இரண்டாவது நாளாக 'உங்களை தேடி உங்கள் ஊரில்'
இரண்டாவது நாளாக 'உங்களை தேடி உங்கள் ஊரில்'
இரண்டாவது நாளாக 'உங்களை தேடி உங்கள் ஊரில்'
ADDED : ஜூலை 20, 2024 07:08 AM
ஈரோடு : ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேற்று முன்தினம் காலை, 9:00 மணி முதல் நேற்று காலை, 9:00 மணி வரை, 'உங்-களை தேடி உங்கள் ஊரில்' என்ற திட்டத்தில் மக்களை சந்தித்து குறைகள் கேட்டு, ஆய்வு நடத்தினார்.
இரண்டாம் நாளான நேற்று, ஈரோடு மாநகராட்சி மண்டலம்-1ல் துாய்மை பணியாளர்கள், வீடுகளில் கழிவுகளை சேகரித்து வாகனங்களில் பிரித்து வைக்கும் பணிகள், வீடுகளுக்கு வழங்கப்-படும் குடிநீரில் குளோரின் கலப்பு அளவு, பச்சப்பாளி மேட்டில், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பால் நுகர்வு, விற்-பனை குறித்தும் ஆய்வு செய்தார். பின், பள்ளிக்கு சென்று குழந்-தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்ட உணவை சுவைத்து பார்த்தார். ஆய்வின் போது, மாநகராட்சி பொறியாளர் விஜயகுமார் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.