Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அத்திக்கடவு திட்டத்தில் அமைச்சர்கள் 'உதார்' உண்ணாவிரதம் அறிவித்தார் பா.ஜ., அண்ணாமலை

அத்திக்கடவு திட்டத்தில் அமைச்சர்கள் 'உதார்' உண்ணாவிரதம் அறிவித்தார் பா.ஜ., அண்ணாமலை

அத்திக்கடவு திட்டத்தில் அமைச்சர்கள் 'உதார்' உண்ணாவிரதம் அறிவித்தார் பா.ஜ., அண்ணாமலை

அத்திக்கடவு திட்டத்தில் அமைச்சர்கள் 'உதார்' உண்ணாவிரதம் அறிவித்தார் பா.ஜ., அண்ணாமலை

ADDED : ஆக 04, 2024 03:48 AM


Google News
பெருந்துறை: ''அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி, பா.ஜ., சார்பில் உண்ணாவிரதம் நடத்தப்படும்,'' என்று, மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சோளிபாளையத்தில், அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் மூன்றாவது நீரேற்று நிலை-யத்தை, மாநில பா.ஜ., தலைவர் அண்ணாமலை நேற்று பார்வை-யிட்டார். திட்டத்தின் தலைமை பொறியாளர் மன்மதனிடம் திட்டம் பற்றி கேட்டறிந்தார். பின்னர் நிருபர்களிடம் அண்ணா-மலை கூறியதாவது:

தமிழக முதல்வர், அமைச்சர்கள் துரைமுருகன், முத்துசாமி ஆகியோர், அவினாசி-அத்திக்கடவு திட்டப்பணி, 99 சதவீதம் முடிந்து, சோதனை ஓட்டம் நடந்து வருவதாக கூறி வருகின்றனர். ஆனால், திட்டம் எப்போது பயன்பட்டுக்கு வரும் என்று கேட்டால், பவானி ஆற்றில் உபரி நீர் வரும்போது வரும் என்-கின்றனர். தற்போது பவானி ஆற்றில் உபரி நீர் செல்கிறது. திட்-டத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டியது தானே? இன்னும் எத்தனை நாளைக்கும் பரிசோதனை ஓட்டம் என்று கூறுவார்கள். எனவே, அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறை-வேற்ற வலியுறுத்தி, வரும், 20ம் தேதி பா.ஜ., சார்பில், மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்-டுள்ளது. போராட்டம் நடக்கும் இடம், இரண்டு நாளில் அறிவிக்-கப்படும்.

மேகதாது அணை விவகாரத்தில், அமைச்சர் துரைமுருகன் அடிக்கடி அடிக்கும் பல்டியை பார்க்கும்போது, பாரிஸ் ஒலிம்-பிக்கில் கலந்து கொண்டிருந்தால், இந்தியாவுக்கு தங்க பதக்கம் கிடைத்திருக்கும். இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது, தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இது தொடர்-பாக நாளை மாலை, ராமநாதபுரம் பகுதி மீனவர் சங்க பிரதிநிதிக-ளுடன், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசவுள்ளேன். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us