Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ முன்னாள் ஊராட்சி செயலரை கொல்ல முயன்ற 2 பேர் கைது

முன்னாள் ஊராட்சி செயலரை கொல்ல முயன்ற 2 பேர் கைது

முன்னாள் ஊராட்சி செயலரை கொல்ல முயன்ற 2 பேர் கைது

முன்னாள் ஊராட்சி செயலரை கொல்ல முயன்ற 2 பேர் கைது

ADDED : ஜூலை 10, 2024 02:59 AM


Google News
சத்தியமங்கலம்:கரூர் மாவட்டம் க.பரமத்தியை சேர்ந்தவர் சரவணன், 42; ஆரியூர் பஞ்., முன்னாள் செயலர். கடந்த, ௨௦௦௩ல் பணியில் இருந்து தற்காலிக பணிநீக்கம் செய்ததால், டிரைவர் வேலைக்கு சென்று விட்டார். திருமணமாகி மனைவியை பிரிந்த நிலையில், கார்வழி பஞ்., அத்தப்பகவுண்டன் வலசு காலனி ஜெயகாளியம்மாள், 30, என்பவருடன் சேர்ந்து வாழ்ந்தார். இவர் கணவரும் இறந்து விட்டார். இவருக்கு இரு பெண் குழந்தை உள்ளது. ஓராண்டுக்கு முன் இவரையும் பிரிந்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஜெய்காளியம்மா, சரவணனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.

இதற்காக தேனி, செங்குளத்துபட்டி பால்பாண்டி, 43; தாளவாடி, சிக்கள்ளி கங்கப்பா, 60, ஆகியோரை ஏவினார். சிக்கள்ளி வனப்பகுதிக்கு சரவணனை அழைத்துச் சென்று, கட்டையால் தாக்கி, கை, கால்களை கம்பியால் கட்டி கொல்ல முயன்றனர். அவர்களிடம் இருந்து தப்பிய சரவணன், தாளவாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். விசாரித்த போலீசார், பால்பாண்டி மற்றும் கங்கப்பாவை கைது செய்தனர். சத்தி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, இருவரையும் கிளை சிறையில் அடைத்தனர். தலைமறைவான ஜெய்காளியம்மாவை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us